BE - படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு.

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை செயலர் சுனில்பாலிவால் மற்றும் துணைவேந்தர் சூரப்பா முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் 10 இலக்கு ரேண்டம் எண்ணை வெளியிட்டுள்ளார்.
1,59,631 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு  விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்: 509 கல்லூரிகளில் பி.இ. மாணவர் சேர்க்கை நடைபெறும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1020 பி.இ இடங்களுக்கு இந்த ஆண்டு அட்மிஷன் நடைபெறும் என்றார். மேலும் 26 கல்லூரிகளில் பி.இ மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் 9110 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1020 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். அதன் பின்னர் நெல்லை, மதுரை மற்றும் கோவையில் மேலும் 720 அரசு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.இ.படிப்புக்கு விண்ணப்பித்தோருக்கு வரும் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும். மேலும் டிடி மூலம் 270 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்

Comments