CBSE 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது.



இந்த தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதினார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், அந்தமான் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 71 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் எழுதினர்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை cbseexamresults.net, cbseresults.nic.in. மற்றும் results.gov.in. இணையதள முகவரிகளில் பார்வையிடலாம்.

இந்த தகவலை இந்திய கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments