பாடநூல் விற்பனை துவக்கம்

தமிழகத்தில், புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று வகுப்புகளுக்கான, பாடநுால்களின்விற்பனை நேற்று துவங்கியது.நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

அதற்கேற்ற வகையில், புதிய பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடநுால்கள், பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.அதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பாடநுால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான, பாடநுால்கள் விற்பனை, நேற்று துவக்கப்பட்டது. 'பிளஸ் 1 பாடநுால்கள் விற்பனை மட்டும், ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கும்' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்