தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்!!!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தத்கல்
முறையில் ஏப்.23 மற்றும் 24 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தனித்தேர்வர்களாக முதலாமாண்டு, இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத ஏப்.16 முதல் ஏப்.21 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
தத்கலில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn. gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தையும், பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து தேர்வருக்கான தகுதி, அறிவுரைகளைப் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏப்.23, ஏப்.24 ஆகிய இரு நாள்களில் தேர்வரே நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை ஏப்.24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!