ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் ஏக்டிவேட்

நாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு சநதா திட்டம் , மார்ச் 31, 2018 வரை நிறைவுறுவதனை தொடர்ந்து, அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ?

இந்நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான பல்ன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் அல்லாதவர்கள்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவன செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழும்.

தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி இதுவரை பிரைம் மேற்கொள்ளாதவர்கள் இன்றைக்கு ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை இந்த திட்டத்தை பெறலாம்.


கடந்த வருடம் அல்லது இடையில் ரீசார்ஜ் செய்தவர்கள் 2019 வரை பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து காணலாம், எவ்விதமான வழிமுறையும் இன்றி தானாகவே அடுத்த ஆண்டிற்கு பிரைம் சந்தாவை ஜியோ புதுப்பித்துக் கொள்ளும். உங்களுக்கு பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதா என அறிய மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்