சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இன்று பொருளியல் மறு தேர்வு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடக்கிறது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், பொருளியல் தேர்வு நடந்தது.

இத்தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதால், தேர்வை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. மறு தேர்வு, ஏப்., 25ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருளியல் தேர்வு இன்று நடக்கவுள்ளது. நாடு முழுவதும் ஆறு லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்