அசத்தல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்!!








தஞ்சாவூர் மாவட்டம் ஊரகப் பகுதியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்து மகளிர் தினவிழா கொண்டாடிய அசத்தினார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ரமாபிரபா.

அதிகாரிகள் என்றாலே தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களைக் குறை கூறுபவர்களாக இருப்பார்கள் என்னும் நிலையை மாற்றி, மகளிர் தினவிழாவை முன்னிட்டு தனக்கு கீழ் பணியாற்றும் 300 க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியைகளை இணைத்து,
எவரது உதவியுமின்றி ஆசிரியைகளின் துணையுடன் தனியொரு பெண்ணாய்
அனைவரையும்
ஒரே மாதிரியாக சீருடை அணியச் செய்து ஒற்றுமையாக ஒன்றுகூடி பல்துறை அலுவர்களையும் ஒன்று சேர்த்து,
உற்சாகமான கொண்டாட்டத்தை நிகழ்த்திக் காட்டி அசத்தி முன்னுதாரணமாக திகழ்கிறார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரமாபிரபா.

இதுபோன்ற தொடக்கங்கள் வருங்காலத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழட்டும்...

சி.சதிஷ்குமார்
கல்வியாளர்கள் சங்கமம்

Comments

Post a Comment