அரசுப்பள்ளியில் பசுமைப்படை அமைத்த ஆசிரியர்








பசுமைத்தலைமையாசிரியர் திரு அ.சீ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்.

மார்ச் 20உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

மார்ச் 21 உலகக்காடுகள் தினம்.

 மார்ச் 22 உலகத்தண்ணீர்தினம்.

வரும் ஏப்ரல் 22 உலக பூமி தினம்














அனைத்தையும் முன்னிட்டு எங்கள் பள்ளி  ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள். பொதுமக்களுக்கும் 300 கன்றுகள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரையும்  வழங்கக்கூறினேன். மகிழ்வுடன் வழங்கினார்கள். பள்ளியின் ஆரம்பத்தில் மாணவர்களின் பிறந்தநாள்களுக்கு கன்றுகள் வழங்கிவந்தேன். இடையில் தண்ணீர் பிரச்சினையால் கன்றுகளை வாங்கி வைக்க இயலவில்லை தற்போது மொத்தமாக இந்நாட்களை நினைவுகூறும் வகையில் வழங்கினேன் உங்கள் வாழ்த்துக்களோடு ஆனையூரில் மேலும் பசுமை தழைக்கட்டும். வழங்கப்பட்ட கன்றுகளில் 1. கொய்யா, பலா, நெல்லி இரண்டுவகை, நாவல், எலுமிச்சை என பழவகைகளையே வழங்கினேன். பழங்கள் என்றால் நல்ல ஆர்வமாக வளர்ப்பார்கள் என்ற நோக்கமும் பறவைகளுக்கும் அணில்போன்ற உயிர்கள் அழியாமல் உணவுகிடைக்கவும் இந்த செயலை மேற்கொண்டேன்.

Comments