ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகம் வழங்க வலியுறுத்தல்


பள்ளி மாணவர்களைப் போல, ஆசிரியர்களுக்கும் இலவசமாக பாடப் புத்தகம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, காலணி, உணவு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் ஒன்று, ஆறு, ஒன்பது, பதினொன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக தருகின்றனர்.




அதேபோல பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு வழங்குவது இல்லை. மாறாக மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனால் ஆசரியர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க ஆசரியர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Comments